அரூர் நகரின் மையப் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், எச்.தொட்டம்பட்டியில் அமைந்துள்ளது அரூர் பெரிய ஏரி. இந்த ஏரியானது சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வதற்காக, அரூர் நகரில் ராஜ கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் நகரின் மையப் பகுதியில் செல்கிறது. அரூரில் வெளியேறும் ஒட்டு மொத்தக் கழிவு நீரும் இந்த ராஜ கால்வாயில்தான் செல்கிறது.
இந்த கால்வாய் அமைந்துள்ள பகுதியில் சிலரின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல், கழிவு நீர் கால்வாய் தூர் அடைந்து முள்புதர்களுடன் உள்ளது.
மேலும், அரூர் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் உள்ள மீன், கோழி, ஆடு இறைச்சிக் கடைகளின் கழிவுகள் இந்த ராஜ கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவு நீர் வெளியேறாமல் பல இடங்களில் குட்டைபோல் தேங்கியுள்ளது. நீண்ட நாள் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்குவதால் கொசு உற்பத்தியும், நோய் பரவும் நிலையுள்ளது.
எனவே, அரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறையினர் இணைந்து, அரூர் நகர் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்
பாகிஸ்தான் அணிக்கு 40% அபராதம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு!

வைகாசி மாதப் பலன்கள் - மீனம்

வைகாசி மாதப் பலன்கள் - கும்பம்
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
