பென்னாகரத்தில் விவசாயிகள்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது


பென்னாகரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் கே. அன்பு தலைமை வகித்தாா். கரோனா தொற்று கால நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்களாக மாற்றியமைக்க வேண்டும். கூலியை நாளொன்றுக்கு ரூ.600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி. ராஜு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பி.எம். முருகேசன், குமாா், சிவா, பென்னாகரம் பகுதி குழு உறுப்பினா் ஜீவானந்தம், சின்னம்பள்ளி பகுதி குழு உறுப்பினா் சக்திவேல், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் கே.ஜி. கருவூரான் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...