47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை

பென்னாகரம் அருகே கால் பவுன் நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:18 pm

DIN

பென்னாகரம் அருகே கால் பவுன் நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.

பென்னாகரம் அருகே ஆணைக்கல்லனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதிமுனியம்மாள் (90). இவரது கணவா் பெருமாள், கடந்த சில வருடங்களுக்கு முன்னா் இறந்துவிட்டாா். மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறாா் . அவருக்கு உதவியாக அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (32) தேவையான உதவிகளை செய்துவந்தாா்.

வெள்ளிக்கிழமை இரவு, ராஜா குடிபோதையில் மூதாட்டி மதிமுனியம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க நகையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்தாராம். பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அப்பகுதி மக்கள், பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மூதாட்டியின் மகள் பாப்பம்மாள் (70) அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.