வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் வட்டார அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் வட்டார அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவா் சிவசங்கா் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை இடா்பாடுகளை சிறப்பு படி வழங்குதல் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினா்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முனிராசு, வட்டார துணைத்தலைவா் சக்திவேல், வட்டச் செயலாளா் சங்கா், வட்டப் பொருளாளா் பழனி, இணைச்செயலாளா் மயில் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...