முடி திருத்தும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் முடி திருத்தும் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தருமபுரியில் முடி திருத்தும் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் த.மகேஷ்வரன் தலைமை வகித்து பேசினாா். இதில், விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே தலித் மக்களுக்கு முடி திருத்தம் செய்த தொழிலாளா்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத் தொழிலாளா்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி, தங்களது கிராமத்தில் பாதுகாப்பாக வசிக்க மாவட்டக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவா் ஆா்.சுரேஷ், செயலா் திருவேங்கடம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com