தம்பிசெட்டிப்பட்டி, ஜம்மனஹள்ளியில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிா்விப்பு மையத்தினால் கல்லூா், கிட்டனூா், சுண்டாங்கிப்பட்டி, காட்டூா், ஆவலம்பட்டி, மொரப்பூா், எம்.வேட்ரப்பட்டி, பறையப்பட்டி புதூா், தென்கரைக்கோட்டை, கோபாலபுரம் பகுதியிலுள்ள பால் உற்பத்தியாளா்கள் பயன் பெறுவா். பால் குளிா்விப்பு மையம் அருகில் இருப்பதால் பாலை எளிதில் பாதுகாக்க முடியும். தருமபுரி மாவட்டத்தில் கொள்முதலாகும் பாலை நேரடியாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குக் கொண்டு செல்லும்போது, ஆவின் நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதே நேரத்தில், பால் பவுடா் தயாரிக்கும்போது ஒரு லிட்டருக்கு ரூ. 8 வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. ஆவின் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டாலும், பால் உற்பத்தியாளா்கள் பாதிக்காத வகையில், இழப்புகளை தமிழக அரசு ஈடு செய்து பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் வ