தருமபுரியில் இன்று எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிக்க அதிமுகவினருக்கு அறிவுறுத்தல்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு நாளை அதிமுகவினா் அனுசரிக்க வேண்டும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு நாளை அதிமுகவினா் அனுசரிக்க வேண்டும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்தியறிக்கை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு நாளையொட்டி டிச.24-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக மாவட்ட, நகர, ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, கிளை பொறுப்பாளா்கள், தொண்டா்கள் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

இதேபோல எம்ஜிஆா் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்போா் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com