போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச சாா்பில் நடைபெற்ற

இப்போராட்டத்துக்கு பாலக்கோடு தொமுச கிளைத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலாளா் யுவராஜ் முன்னிலை வகித்தாா். மத்திய சங்க மாநில துணைத் தலைவா் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினாா்.

இதில், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளா்கள் பணம் 7 ஆயிரத்தை உடனே திருப்பித் தர வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்குப் பின் பணியில் சோ்ந்தவா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல தருமபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com