47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோபிநாதம்பட்டியில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே கோபிநாதம்பட்டியில் மதுக்கடை மற்றும் மதுக் கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என அக் கிராம மக்கள் வலியுறுத்தினா்.

News image
கோபிநாதம்பட்டியில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
Updated On :28 டிசம்பர் 2020, 9:57 pm

DIN

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே கோபிநாதம்பட்டியில் மதுக்கடை மற்றும் மதுக் கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என அக் கிராம மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, கோபிநாதம்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில், 32 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், இங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறுகிறது. தற்போது, இந்தப் பகுதியில் மதுக்கடையும், மதுக்கூடமும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில் மதுக்கடை அமைத்தால், இங்குள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா், வாரச்சந்தைக்கு வருவோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கோபிநாதம்பட்டியில் மதுக்கடை, மதுக்கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.