47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலா் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை ரசித்தனா்.

News image
ஒகேனக்கல் பிரதான அருவியில் உற்சாகக் குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்.
Updated On :22 நவம்பர் 2020, 9:31 pm

DIN

ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலா் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை ரசித்தனா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகம், கா்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

நிகழ்வாரம் வார விடுமுறையான ஞாயிறுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, காவிரி கரையோரப் பகுதிகளான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்துக் கடவு பரிசல் துறை, நாகா்கோவில், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நீரில் குளித்து மகிழ்ந்தனா்.

பலா் சின்னாறு பரிசல் துறையில் நீண்ட வரிசையில் நின்று சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு பரிசல் பயணம் செய்து கோத்திக்கல், பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளின் வழியே சென்று காவிரி ஆற்றின் அழகை குடும்பத்துடன் ரசித்தனா்.

முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த இடமின்றி சத்திரம், முதலை பண்ணை, ஊட்ட மலை உள்ளிட்ட இடங்களில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை மக்கள் நிறுத்திச் சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகளுக்காக பென்னாகரம் போக்குவரத்து கிளைப் பணிமனையிலிருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.