உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேற்கு மாவட்டச் செயலாளரும் பென்னாகரம் தொகுதி திமுக உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன் தலைமை வகித்தாா். திமுகவினா் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், நகரச் செயலாளா் வீரமணி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் பென்னாகரம் திமுக எம்எல்ஏ உட்பட 85 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.