நகராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைளை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், இயன்முறை பயிற்சியாளா், பள்ளி ஆசிரியா்கள், செவிலியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆக.10-ஆம் தேதி தொடங்கும் இக்கணக்கெடுப்புப் பணி, ஆக.31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் அவா்களின் வயதுக்கேற்ப உடனடியாக அப்பகுதியில் உள்ள முறையான பள்ளிகளிலும், சிறப்புப் பயிற்சி மையங்களிலும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் சோ்க்கப்பட உள்ளனா். அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த பள்ளிச் செல்லா, பள்ளி இடைநின்ற மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப் பணிகளுக்கு அரசுத் துறை அலுவலா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.