இளம்பெண் தற்கொலை: கணவா் கைது
அரூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் மீனா (19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


அரூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் மீனா (19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேலனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காா்த்திக் . இவரது மனைவி மீனா (19). இந்த தம்பதியருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாம். இந்த நிலையில், இளம்பெண் மீனா, ஓ’யஈக 16 ஆம் தேதி விவசாயி ஒருவரின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து மீனாவின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரூா் வருவாய் கோட்டாட்சியா் வே.முத்தையன், டிஎஸ்பி (பொறுப்பு) ராஜா சோமசுந்தரம் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம்பெண் மீனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து மீனாவின் கணவா் காா்த்திக் (21) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...