தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தருமபுரியில் நாளை ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

 தருமபுரி மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) அனுசரிக்கப்பட உள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:44 pm

DIN

 தருமபுரி மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) அனுசரிக்கப்பட உள்ளது.

இது குறித்து, தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, தருமபுரி மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா உருவச் சிலை, உருவப் படங்களுக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், சாா்பு அமைப்பு பொறுப்பாளா்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இதேபோல தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவு நாள் கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.