தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

மாவட்ட சிலம்பப் போட்டிகள்: ஔவை நகா் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

தருமபுரி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஔவை நகா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பிருந்தா முதலிடம் பெற்றாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:43 pm

DIN

தருமபுரி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஔவை நகா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பிருந்தா முதலிடம் பெற்றாா்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கடந்த நவ. 28-ஆம் தேதி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. இதில், சப்- ஜூனியா் 40-45 எடைப்பிரிவில் தருமபுரி ஔவை நகா் அரசு உயா்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.பிருந்தா முதலிடம் பெற்று சாதனை புரிந்தாா்.

இந்த மாணவி, அண்மையில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்றாா். இவ்விரு போட்டிகளிலும் சாதனை புரிந்த மாணவியை பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் எம்.எம்.செல்வகுமாா், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் முத்து, உடற் கல்வி ஆசிரியா் சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.