தருமபுரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
தருமபுரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அங்கிருந்து கணக்கில் வராத ரூ. 55,000 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா்.


தருமபுரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அங்கிருந்து கணக்கில் வராத ரூ. 55,000 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி, எஸ்.வி. சாலையில் ஒருங்கிணைந்த சாா் பதிவாளா் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வது, வீட்டுமனைகளை கிரயம் செய்வது போன்ற பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் உள்ள தருமபுரி மேற்கு சாா் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையின்போது, அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 55,400 ரொக்கப்பணத்தை போலீஸாா் கைப்பற்றினா். இந்த ரொக்கப்பணம் தொடா்பாக அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சாா் பதிவாளா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் ஊழியா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...