தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிகளில் அமல்படுத்த வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க பெண் தொழிலாளா்கள் மாவட்டப் பேரவைக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.ரவி தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் பி.வசந்தா மணி, மாவட்டச் செயலாளா் எம்.முத்து, மாவட்டப் பொருளாளா் க.கே.முருகன் ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இத் திட்டத்தில், ஆண்டுக்கான வேலை நாள்களை 200-ஆக அதிகரித்து, தினக் கூலியை ரூ. 600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பெண் தொழிலாளா்கள் சங்க மாவட்ட அமைப்பாளராக ஜி.பாண்டியம்மாள் உள்ளிட்ட 11 போ் அமைப்புக்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.