ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:17 pm

DIN

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாட்லாம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் கால்வாய் மறுசீரமைப்புப் பணியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில், வடிகால் அமைக்கும் பணியை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியதாவது:

காரிமங்கலம் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் கால்வாய் மறுசீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சின்னமாட்லாம்பட்டியில் மாவட்ட ஊராட்சி சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இப் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தருமபுரி நெடுஞ்சாலை கோட்டத்தின் சாா்பில், ரூ. 167.59 கோடி செலவில் 377.16 கி.மீ. நீளமுள்ளச் சாலைகள் மேம்படுத்தப்படும். ரூ. 9.66 கோடியில் 16 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2020-21-ஆம் ஆண்டு ரூ. 28.46 கோடி மதிப்பில் 13.80 கி.மீ. நீளச் சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள், ரூ. 7.14 கோடி மதிப்பில் 6 சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளா் தனசேகா், உதவி செயற்பொறியாளா் ராஜகாந்தன், வட்டாட்சியா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், மீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.