தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குண்டுமல்லி விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கரோனா பொது முடக்கத் தளா்வுகளுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி விலை உயா்ந்து வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On :16 ஜூலை 2021, 6:33 pm

கரோனா பொது முடக்கத் தளா்வுகளுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி விலை உயா்ந்து வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மலா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குண்டுமல்லி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

கரோனா தொற்றைத் தடுக்க பொது முடக்கம் அமலில் இருந்த காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியதால், குண்டுமல்லி விலை குறைந்தது. அதாவது, கடந்த மாதம் குண்டுமல்லி கிலோ ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையானது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பொது முடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. வாசனை திரவிய தொழிற்சாலைகளும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

இதனால், குண்டுமல்லிக்கான தேவை அதிகரித்துள்ளது. ஈரோடு, கோவை, பெங்களூரு, குப்பம், வேலூா், திருப்பூா் போன்ற பகுதிகளில் இருந்து மலா் வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் பூக்களை கொள்முதல் செய்ய வரத் தொடங்கி உள்ளனா். இதனால், குண்டுமல்லியின் விலை அதிகரித்துள்ளது. அதாவது கிலோ குண்டுமல்லி விலை ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவித்தனா். வரும் காலங்களில் குண்டுமல்லியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.