டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரா், வீராங்கனைகள் அனைவருக்கும் தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்கி உள்ளது. விளையாட்டு வீரா், வீராங்கனைகளை ஊக்கப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதைத் தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பயன்படுத்திக்கொண்டு மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் வகையிலும் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலா் பியூலா ஜென் சுசீலா, துணை வட்டாட்சியா் பாரதி, பயிற்சியாளா்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.