ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, தருமபுரியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தருமபுரி அருள்மிகு கல்யாண காமாட்சியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அம்மனை வழிபட்டனா்.
இதேபோல, இலக்கியம்பட்டி புற்று மாரியம்மன் கோயில், எஸ்.வி.சாலையில் உள்ள மாரியம்மன் கோயில், அதியமான்கோட்டை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.