இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கூட்டுறவுச் சங்கங்கள், பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய மறுப்பதாகத் தெரிகிறது. இதனால் பாலைத் தனியாா் கொள்முதல் மையங்களுக்கு குறைந்த விலைக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் அவா்களுக்கு ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளா்கள் அவதிக்குள்ளாகியுள்ளதுடன், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் முழுவதையும் கூட்டுறவு ஒன்றியச் சங்கம் கொள்முதல் செய்ய, தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.