ஒசூா், சிப்காட் பகுதியில் வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், பேடரப்பள்ளி பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (28), வியாழக்கிழமை இரவு சிப்காட் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவரை சுற்றி வளைத்தனா். அதைடுத்து, அவா்களிடம் இருந்து அபிலாஷ் தப்பி ஓட்டம் பிடித்தாா். ஆனால், மா்மக் கும்பல் விரட்டிச் சென்று அவரை படுகொலை செய்தனா். இதில் அபிலாஷ் தலை, கழுத்து, நெற்றி ஆகிய பகுதிகளில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற சிப்காட் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த வாரம் ஒசூா், வசந்த் நகரில் ரூ. 31 லட்சம் கந்துவட்டி கொடுமையில் இளம் தொழிலதிபா் கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு இளைஞா் படுகொலை செய்யப்பட்டது ஒசூா் மக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

