‘விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும்’

விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும் என தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.
‘விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும்’

விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும் என தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பாக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பேசியதாவது:

நல்லம்பள்ளி பகுதிக்குள்பட்ட விவசாயிகளுக்கு வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், அதிக லாபம் தரக்கூடிய, சாகுபடி அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் பலன் தரக்கூடிய தென்னை, கொய்யா, மா, சப்போட்டா சாகுபடி குறித்தும் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, நல்லம்பள்ளி விதைக் கிடங்கை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், வட்டார வேளாண் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com