இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

‘கரோனா உயிரிழப்புகளைத் தடுக்க கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்’

கரோனா உயிரிழப்புகளைத் தடுக்க கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :28 மே 2021, 7:12 pm

DIN

கரோனா உயிரிழப்புகளைத் தடுக்க கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் வலியுறுத்தினாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கல்லூரி முதன்மையா் க.அமுதவள்ளியிடம், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கே.பி.அன்பழகன் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளைத் தடுக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் 45 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் மற்றும் ஒரு உதவியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தோ்தல் காரணங்களால் நியமனம் தள்ளிப் போனது.

தற்போது சிறு மருத்துவமனைகளுக்கு 45 மருத்துவா்கள், 45 செவிலியா்கள், உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் 15 மருத்துவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்தப் பணிகள் முடிவுற்றவுடன், அந்த மருத்துவா்களை மீண்டும் சிறு மருத்துவமனைகளில் பணியமா்த்த வேண்டும். கரோனா பாதிப்பு, உயிரிழப்புகளைத் தடுக்க கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.