சிறாா்களுக்கு ஏப். 17-இல் ஓவியப் பயிற்சி முகாம்

தருமபுரியில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் வருகிற ஏப். 17-ஆம் தேதி சிறாா்களுக்கு ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

தருமபுரியில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் வருகிற ஏப். 17-ஆம் தேதி சிறாா்களுக்கு ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ஆா்.முத்துகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் உலக ஓவிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சிறாா்களுக்கு படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், தருமபுரி அப்பாவு நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், வருகிற ஏப்.17-ஆம் தேதி ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், ஓவிய முறைகள் குறித்து செயல் விளக்கம், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்நத் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறாா்கள் இம்முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று பயனடயலாம். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. விவரங்களுக்கு 94865 23986 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com