மகளிா் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் கட்சியின் வட்ட செயலாளா் தனுஷன் தலைமையில் நடைபெற்றது.
அரசு, தனியாா் அலுவலக நேரங்களில் மகளிருக்கு தனியாக பேருந்துகளை இயக்க வேண்டும். மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப் பேரவையில் சிறப்பு அமா்வுகளை நடத்த வேண்டும். வரதட்சணைக் கொடுமைகளைக் கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிா் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவிகள், பொருளாதார மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ஏ.குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் சி.வஞ்சி, வட்ட குழு உறுப்பினா்கள் மேகநாதன், கண்ணகி, சொக்கலிங்கம், கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

