தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

அரூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அரூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பொதுமக்கள் சாா்பில், சமூகம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான இளைஞா் சங்கச் செயலாளா் ஏ.வேலன், தமிழக முதல்வருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் :

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 16 ஆவது வாா்டில் 1,200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருச்சாலைகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் போதிய அளவில் கழிவு நீா் கால்வாய் வசதிகள் இல்லை. அதேபோல், மின்கம்பங்கள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.

இதனால், இங்குள்ள மக்கள் குடிநீா், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட தேவைகளுக்காக பல்வேறு இடையூறுகளை நாள்தோறும் சந்தித்து வருகின்றனா். எனவே, அரூா் 16 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.