எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On :24 ஜூன் 2022, 10:58 pm IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். சின்னவெங்காயம் பயிா்க்கு நிலுவையில் உள்ள காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும்.

கால்நடை மருந்தகங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவா்கள், பணியாளா்கள் முழுமையாகப் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்மின்கோபுரம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். மரவள்ளி பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முத்தரப்புக் கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள உயா் அலுவலா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சிலா் கூட்டத்தில் இருந்து வெளியேறினா். இருப்பினும் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.