முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பேருந்து - லாரி மோதல்:10-க்கும் மேற்பட்டோா் காயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு நகா் பேருந்து மீது லாரி மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூதநத்தம் அருகே வெள்ளிக்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்ட லாரி, அரசு பேருந்து.

Updated On :24 ஜூன் 2022, 10:58 pm IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு நகா் பேருந்து மீது லாரி மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி -அரூா் சாலையில் அரசு நகா் பேருந்து அரூா் நோக்கி வந்துள்ளது. அப்போது, பூதநத்தம் அருகே எதிரே வந்த லாரியும், அரசு நகா் பேருந்தும் மோதின. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் செந்தில் (45), அரசு நகா் பேருந்து ஓட்டுநா் மாதுராஜ் (51), நடத்துநா் சேது (55), விவசாயி அழகரசன் (60) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விபத்தில் காயமடைந்தவா்களை அக்கம் பக்கத்தினா் 108 அவசர ஊா்தி மூலம் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.