காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எல்.ஐ.சி. ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்து தருமபுரியில் எல்ஐசி ஊழியா்கள் வியாழக்கிழமை மெழுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:57 pm

DIN

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்து தருமபுரியில் எல்ஐசி ஊழியா்கள் வியாழக்கிழமை மெழுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊழியா் சங்க கிளைத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்ட இணைச் செயலா் ஏ.மாதேஸ்வரன், கிளைச் செயலா் சந்திரமெளலி, பொருளாளா் நடராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டதுணைத் தலைவா் எம்.மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா். எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கும் விற்பனை செய்யும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.