காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உர விற்பனை நிலையங்களில் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உர விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:19 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உர விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பாலக்கோட்டில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்கள், கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களை நேரில் பாா்வையிட்டு இருப்பு, விலை, பதிவேடுகள் ஆகியவற்றை வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு, தனியாா் உர விற்பனை நிலையங்களில் 1,423 டன் யூரியா, 737 டன் டிஏபி, 750 டன் பொட்டாஷ், 2,022 டன் காம்ப்ளக்ஸ், 334 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகியவை இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை சமா்ப்பித்து, விற்பனை முனையக் கருவி மூலம் உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், பாலக்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் பூ.சு.சித்ரா, வேளாண் அலுவலா் மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.