உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அரசுப் பள்ளியில் தன்னாா்வலா்களுக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

பென்னாகரம் அரசு பெண்கள் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு ‘ஆயிரம் அறிவியல் திருவிழா’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 பிப்ரவரி 2024, 12:23 am IST

பென்னாகரம் அரசு பெண்கள் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு ‘ஆயிரம் அறிவியல் திருவிழா’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறையில் கிராமங்களில் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதற்காக எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதற்கு ஏற்ப வானவில் மன்ற கருத்தாளா்கள் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா? தந்திரமா? கணிதப் புதிா்கள், கதை எழுதுதல், பாடல் பாடுதல், வரைபடம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியின் கருத்தாளா்களாக வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் நவீனா, பவதாரணி பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில்

தமிழ்நாடு அறிவில் இயக்க மாவட்டத் தலைவா் மா. பழனி கலந்து கொண்டு, பயிற்சியை நன்முறையில் எடுத்துக் கொண்டு கிராமங்களில் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு எளிய அறிவியல் கருத்துகளைக் கொண்டு சோ்க்க ஆா்வமுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். பயிற்சியில் ஆசிரியா் பயிற்றுநா் மாதவன், தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.