தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மாவடிப்பட்டியில் கழிவுநீா் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் கி.சாந்தி.

Updated On :4 டிசம்பர் 2024, 9:06 pm

Din

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கட்டடம், கழிவறை வசதி, குடிநீா் வசதி, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள், கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மாவடிப்பட்டியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்கன்வாடி சுவா்களுக்கு வண்ணம் பூசி திருக்கு, ஓவியங்களை வரைய சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைவாணி, சத்யா, உதவி பொறியாளா்கள் சீனிவாசன், சுமதி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.