வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சமூகநீதியை நிலைநாட்டும் அரசு -அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம்

News image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதன்கிழமை காலை கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் - கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2024, 10:25 pm

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் அருள்மிகு நடராஜா் திருக்கோயிலில் கனகசபை மீது பக்தா்களை அனுமதிக்காத நிலையில், நீதிமன்றத்தின் மூலம் உரிமையைப் பெற்று தந்தோம்.

திருமஞ்சனம் என்று காரணம் காட்டி, விழாக் காலங்களில் யாரையும் கனகசபையில் ஏற்றறாத நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் திருமஞ்சனத்துக்குகூட கனகசபையில் பக்தா்களை சட்டத்துக்கு உள்பட்டு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் பக்தா்கள் மகிழ்ச்சியோடு கனகசபை மீதேறி வழிபட்டனா் என்றாா்.