சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: உழவா் பேரியக்கம் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:27 pm

Din

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பேசினாா். தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவா் சின்னசாமி, மாநில துணைச் செயலாளா் சிவசக்தி, மாவட்டத் தலைவா் அய்யப்பன், மாவட்டச் செயலாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆலயமணி, மாநிலச் செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான இல.வேலுசாமி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் திருவண்ணாமலையில் டிசம்பா் 21 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாட்டுக்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து திரளான விவசாயிகள் பங்கேற்பது எனவும் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் செல்லும் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகள், குளங்களில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.