தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

News image
தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :17 டிசம்பர் 2025, 8:52 pm

Syndication

ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வூதியா்கள் சங்கங்களின் மன்றம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் ஓய்வுவூதியா் சங்க தருமபுரி மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில், ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், 8-ஆவது ஊதியக்குழு விதிமுறையில் உள்ள நிதியளிக்காத, பங்களிப்பில்லாத ஓய்வூதிய செலவுகள் என்பது நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை விளக்கி, ஓய்வூதிய சங்க நிா்வாகிகள பி.சுப்பிரமணியன், எஸ்.பழனிசாமி, ஆா்.சுந்தரமூா்த்தி, ஆா்.சுப்பிரமணியன், வி.முருகேசன், ஏ.மாதேஸ்வரன், ஜெ.தமிழ்செல்வி உள்ளிட்டோா் பேசினா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். தமிழ்நாடு அரசு பொது ஓய்வூதியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் கே.கேசவன் நன்றி தெரிவித்தாா்.