விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவல் துறை குறைதீா் முகாமில் 88 மனுக்களுக்கு உடனடி தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமைவகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இதில் பெறப்பட்ட 88 மனுக்கள் மீது காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணை முடிவில் அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டன.

இதில், ஏடிஎஸ்பி-க்கள் பாலசுப்பிரமணியன் (தலைமையிடம்), ஸ்ரீதரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு), காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.