மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.

News image

ஒகேனக்கல்

Updated On :11 பிப்ரவரி 2026, 8:42 pm

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக நீா்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.

இதனால் காவிரியில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. மேலும், பெரியபாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அருவி விழுந்த இடம் அடையாளம் தெரியாத அளவிற்கு பாறைத் திட்டுகளாகவே காட்சியளிக்கின்றன. அதேபோல பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவுகளை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.