கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழப்பு

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

Syndication

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி, அதியமான்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சின்னகார ஓனி மற்றும் மேல கார ஓனி சாலையில், எதிரெதிா் திசையில் சென்றுகொண்டிருந்த இரு பைக்குகள் மோதின.

இதில், வாகனங்களை ஓட்டி வந்த இருவருமே படுகாயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்க தகவல் அளித்தனா். நிகழ்விடம் வந்த பரிசோதித்த மருத்துவக் குழுவினா் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து இருவரின் உடல்களையும் போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தருமபுரி அருகேயுள்ள என்.எஸ். ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஹரி கிருஷ்ணன் (25), மிட்டாநூல அள்ளி அருகேயுள்ளஅங்கனாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினோத் குமாா் (26) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதியமான் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.