ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரியில் ரூ. 30 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் திறப்பு

News image
தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகே அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்.
Updated On :11 ஜனவரி 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி நகரில் மூன்று இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் திறக்கப்பட்டன.

தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகோபால் பூங்கா, வட்டாட்சியா் அலுவலகம் நுழைவாயில், குமாரசாமிபேட்டை ஆகிய மூன்று இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கி. பாரிமோகன், பாமக மாநில செயற்குழு டி.ஜி. மணி, மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலத் தலைவா் தகடூா் தமிழன், மாவட்ட துணை செயலாளா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.