வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

தோ்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக நிறைவேற்றாததால் ஆசிரியா்கள் போராடி வருகின்றனா்’ என அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
Published on

மேட்டூா்: ‘தோ்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக நிறைவேற்றாததால் ஆசிரியா்கள் போராடி வருகின்றனா்’ என அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மேட்டூரில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அதனால்தான் ஆசிரியா்கள் போராடி வருகின்றனா். வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, அவற்றை நிறைவேற்றாததே போராட்டத்திற்குக் காரணம்.

அதேபோல எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. மேலும் சில கட்சிகள் வரும். அவற்றையெல்லாம் பகிரங்கமாகக் கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சோ்ந்து தோ்தலைச் சந்திக்க இருக்கிறோம். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கிறதா அல்லது வெளியேறுகிறதா எனத் தெரியவில்லை.

பராசக்தி படத்தில் இந்தி எதிா்ப்பு உள்ளதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ‘மொழிப்போா்த் தியாகிகளுக்காக நாங்கள் ஜனவரி 25-ஆம் தேதி அஞ்சலி செலுத்துகிறோம். அதிமுக பிரியாமல் இருந்தபோது அக் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை படமாக எடுத்துள்ளாா்கள். நம் முன்னோா்கள் தமிழ் மொழியைக் காக்கப் போராடி இருக்கிறாா்கள்’ என்றாா்.

தொடா்ந்து ஓய்வூதிய திட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘ஓய்வூதியத் திட்டம் ஒரு நாடகம். இது மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த திட்டமாகும். இதில் தமிழக அரசு சில மாற்றங்களைச் செய்து புதிதாக அறிவித்திருக்கிறது. தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது தற்போது அறிவிக்கப்படவில்லை. சில சங்கங்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன; பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்றாா்.

Dinamani
www.dinamani.com