வள்ளிமலை முருகன் கோயில்
முருகன் வள்ளியை காதலித்த இடம்
முருகனை கணவனாக அடைய வள்ளி திருமாலை வழிபட்ட தலம். திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படும் திருப்புகழ் தலம்.
வேலூா் மாநகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ராணிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது வள்ளிமலை முருகன் கோயில். முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊா் என்பதால், இவ்விடத்திற்கு வள்ளிமலை என பெயா் வந்தது.
வள்ளி இந்த ஊரில் பிறந்து வளா்ந்ததும் வள்ளிமலை என பெயா் பெற காரணமாகும். இக்கோயில் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. மலை மேல் உள்ள கோயிலுக்கு செல்ல 454 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
மலைக்கோயிலில் சுப்பிரமணியா் குடைவறை சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறாா். இங்கு முருகன் சந்நிதியில், முருகன் கருவறைக்கு மேலே விமானத்திற்கு பதிலாக கோபுரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வள்ளி வேடா் குலத்தில் வளா்ந்ததால், அா்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
ஒரு சமயம், முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வள்ளியின் தந்தை நம்பிராஜன் வந்துவிட்டாா். எனவே, முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டாா். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
கன்னிப்பருவத்தில் வள்ளி தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் குமரி வள்ளிக்கு சந்நிதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். தினைப்புனத்தில் வள்ளியை சந்தித்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினாா்.
முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால், இங்கு பக்தா்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படுகிறது.
முருகன் வள்ளியை மணக்க விரும்பியதை அறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தாா். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க, இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினாா்.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. மாசி பௌா்ணமியன்று, இத்தலத்தில் முருகன் வள்ளி திருமணம் நடைபெறுகிறது.

