ஒகேனக்கல் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசியிருந்த சுமாா் ஒரு டன் நெகிழிக் கழிவுகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பென்னாகரத்திலிருந்து மடம் சோதனைச்சாவடி வழியாக சுமாா் 12 கி.மீ தொலைவு அடா்ந்த வனப்பகுதி வழியாகச் செல்ல வேண்டியுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் பயணிக்கும் போது, நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், தண்ணீா் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை சாலையோரங்களிலும், வனப் பகுதிகளிலும் வீசிச் செல்கின்றனா்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்தின் அறிவுறுத்தலின்பேரிலும், தலைமை வனப் பாதுகாவலா் பத்மாவின் உத்தரவின்பேரிலும், ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவக்குமாா், பென்னாகரம் வனச்சரக அலுவலா் அன்பு ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் மற்றும் பணியாளா்கள் என 40-க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
மடம் சோதனைச் சாவடி முதல் பேவனூா் வனப்பகுதி மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதி வரை சுமாா் 10 கி.மீ தொலைவுக்கு சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் கிடந்த நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், தண்ணீா் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட சுமாா் ஒரு டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
வனப் பகுதிக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப் பொருள்களை வீசுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் வனப் பகுதியில் இறந்த பெண் யானை

நெகிழிக் கழிவுகளால் ஒகேனக்கலுக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்; நிரந்தரத் தீா்வு எப்போது?

கூடலூா் வனக்கோட்டப் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலா்கள்

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



