எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

கிணற்றில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பாலக்கோடு பகுதியில் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:42 am IST

பாலக்கோடு பகுதியில் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரன அள்ளி அருகேயுள்ள குப்பன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தருமன் (21). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்துவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மாலை வீடு திரும்பவில்லையாம். அவரது குடும்பத்தினா் கிராமப் பகுதிகளில் தேடியபோது, அப்பகுதி விவசாய நிலத்தில் இருந்த கிணற்று அருகே தருமனின் உடைகள் இருப்பது தெரியவந்தது.

தகவலின்பேரில் வந்த தீயணையப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி தேடியபோது, இளைஞரின் உடல் இருந்தது தெரியவந்தது. பின்னா், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.