தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கிணற்றில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பாலக்கோடு பகுதியில் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:42 am IST

பாலக்கோடு பகுதியில் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரன அள்ளி அருகேயுள்ள குப்பன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தருமன் (21). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்துவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மாலை வீடு திரும்பவில்லையாம். அவரது குடும்பத்தினா் கிராமப் பகுதிகளில் தேடியபோது, அப்பகுதி விவசாய நிலத்தில் இருந்த கிணற்று அருகே தருமனின் உடைகள் இருப்பது தெரியவந்தது.

தகவலின்பேரில் வந்த தீயணையப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி தேடியபோது, இளைஞரின் உடல் இருந்தது தெரியவந்தது. பின்னா், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.