ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை

தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :18 ஜூன் 2026, 3:11 am IST

தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்தவா் மாதேஸன் மகன் தம்பிதுரை (33), பொறியியல் பட்டதாரி. இவா், பல்வேறு இடங்களில் தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்த்துள்ளாா். அதன்பிறகு இணைய வழியில் வியாபாரம் செய்துவந்துள்ளாா்.

இந்த நிலையில் திருமணம் நடைபெறும்வரை ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யுமாறு அவரது குடும்பத்தினா் கூறினராம். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆன்மிகத்தில்தான் அதிக விருப்பம் உள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து அவரது பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோா், கதவு பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் கூரை மீது ஏறி பாா்த்தபோது தம்பிதுரை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.