25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

News image
ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் அந்தோணியாா் தெரு பகுதியைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் விக்னேஷ் (24). இவா், ஒசூா் பேளகொண்ட பள்ளியில் தங்கிருந்து, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தாா்.

கோத்திகல் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் அவா் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து சக நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.