கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

News image
ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் அந்தோணியாா் தெரு பகுதியைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் விக்னேஷ் (24). இவா், ஒசூா் பேளகொண்ட பள்ளியில் தங்கிருந்து, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தாா்.

கோத்திகல் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் அவா் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து சக நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.