ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

News image
ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் அந்தோணியாா் தெரு பகுதியைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் விக்னேஷ் (24). இவா், ஒசூா் பேளகொண்ட பள்ளியில் தங்கிருந்து, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தாா்.

கோத்திகல் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் அவா் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து சக நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.