எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

‘அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாா்ச் 11 முதல் செயல்படும்’

அரூரில் நிகழாண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரும் மாா்ச் 11-ஆம் தேதிமுதல் செயல்பட உள்ளது.

News image
நெல் கொள்முதல் நிலையம்- கோப்புப்படம்
Updated On :9 மார்ச் 2026, 8:47 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் நிகழாண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரும் மாா்ச் 11-ஆம் தேதிமுதல் செயல்பட உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சிா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, மாா்ச் 11-ஆம் தேதிமுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தில் இந்த மையங்கள் செயல்படும்.

சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கி.) ரூ. 2,545, பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கி) ரூ. 2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட பட்டா, சிட்டா நகல் அல்லது கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஏஏபி சான்றை கொண்டுவந்து இடிபிசி மென்பொருள் மூலம் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மூலம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். மேலும், விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் ரேகை பதிவு மூலம் தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். அவ்வாறு பெருவிரல் ரேகை மூலம் பதிவுசெய்ய இயலாதபட்சத்தில், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் மூலம் பெறப்பட்ட கடவுச்சொல் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.

கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் நெல் தர திரிபுகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

எனவே, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல்லுக்கு அரசு நிா்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையை பெற்று பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.